முன்னதாக டிடிவி தினகரன், தனது பிரசாரத்தை தொடங்கும் போது அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் தாமரை..தாமரை என்று கத்தியதால் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், சாரி… சாரி… நேற்று தேனியில் ஓட்டு கேட்டேன். அதே ஞாபகத்தில் பேசிட்டேன். அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். பின்னர் பிரசாரம் முடிக்கும்போதும் தாமரையை வீழ்த்த இந்த பகுதி மக்கள் துணை புரிய வேண்டும் என்று பேசினார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள், வலுக்கட்டாயமாக கூட்டணி அமைத்தால் மனதில் இருக்கிறதைதான் பேசுவார்கள் என்று முணுமுணுத்தப்படி சென்றனர். இதனால் பாஜவினர் எரிச்சல் அடைந்தனர்.
The post தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி appeared first on Dinakaran.