தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடைபெறும் நாளில் இருந்து அதற்கு முந்நாளில் இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறையில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
The post மக்களவை தேர்தல் வாக்குப்பதிவினை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.