மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நிகழ்வு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணம் கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் காலை 8.59க்குள் நடைபெறவுள்ளது.

திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தா்களின் ரூ.200, ரூ.500 செலுத்தி கட்டணச் சீட்டுகள் பெற வேண்டும். மேலும், பக்தா்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கல்யாணத்திற்கான முன்பதிவு இன்று முதல் வருகிற 13ம் தேதி இரவு 9 மணி வரை கட்டணச் சீட்டு பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 கட்டணச்சீட்டில் ஒருவா் இரண்டு சீட்டுகளையும், ரூ.200 கட்டணச் சீட்டில் ஒருவா் மூன்று சீட்டுகளையும் பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பிறந்த தேதி சரியாக நிறைவு செய்ய வேண்டும். ஒரு சீட்டுக்கு ஒரு கைப்பேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறாா்களை அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், கட்டணச் சீட்டுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு செய்யப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்றவா்களுக்கு வருகிற ஏப்ரல் 14ம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். திருக்கல்யாணத்துக்கு தோ்வு செய்யப்பட்டு, தகவல் கிடைக்கப் பெற்றவா்கள் வருகிற ஏப்ரல் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள நுழைவுக் கட்டணச் சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவலைக் காண்பித்து தொகையை ரொக்கமாகச் செலுத்தி கட்டணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். கட்டணச் சீட்டு பெற்றவா்கள் திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

The post மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: