மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி

போபால்: மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் புறப்பட முடியாததால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மாவட்டத்தில் இரவு தங்கினார். மபி தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற ராகுல், அங்கு மாண்ட்லா மற்றும் ஷாடோல் ஆகிய இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார். ஷாடோலில் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் புறப்பட முடியவில்லை. இதனால் டெல்லிக்கு புறப்பட இருந்த ​​அவர் ஷாடோலில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு தங்கி விட்டு இன்று காலை 6 மணிக்கு புறப்படுவார் என்று மபி மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி தெரிவித்தார்.

The post மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: