பாம்பு கடித்து தொழிலாளி பலி

ஈரோடு, ஏப்.7: ஈரோடு மாவட்டம் கோபி கலிங்கியம் அரிஜன காலனியை சேர்ந்தவர் அம்மாசை (71). விவசாய தொழிலாளி. இவர், கடந்த மாதம் 30ம் தேதி கடத்தூர் நைனாம்பாளையத்தை சேர்ந்த முடியப்பன் என்பவரது தோட்டத்தில் நிலக்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, அம்மாசையின் வலது காலில் விஷ பாம்பு கடித்தது. இதனால், அம்மாசை வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதைக்கேட்டு, தோட்டத்தின் உரிமையளர் முடியப்பன் அம்மாசையை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துமவனையிலும், இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாசையின் மகன் தேவராசு நேற்று முன்தினம் கடத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாம்பு கடித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: