சேரன்மகாதேவியில் முதியவர்களிடம் தபால் வாக்குசேகரிப்பு

வீரவநல்லூர்,ஏப்.7: சேரன்மகாதேவியில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்கு சேகரிப்பு சப்கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் நடந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிடமிருந்து தபால் வாக்கு சேகரிப்பு பணியானது நேற்று சேரன்மகாதேவியில் நடந்தது.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் நேரடி கண்காணிப்பில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடமிருந்து படிவம்-12டி பெற்று சீலிட்டு தபால் வாக்கு பெட்டியில் சேகரித்தனர்.

The post சேரன்மகாதேவியில் முதியவர்களிடம் தபால் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: