தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்

ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் திறனிலும் உறுதியுடன் உள்ளது. பிராந்தியத்தில் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் எப்போதும் நிரூபித்துள்ளது.

அதற்காக அமைதிக்கான அதன் விருப்பத்தை தவறாகக் கருதக்கூடாது. அதே நேரத்தில் உள்நாட்டில் தேர்தல் ஆதாயங்களுக்காக வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசக்கூடாது. இது போன்ற பொறுப்பற்ற நடத்தை பிராந்திய அமைதியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறது. இந்தியாவின் கொடூரமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

The post தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: