ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகன்

*பெண்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்

ஸ்ரீ காளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகனுக்கு பெண்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் முதல்வர் ஜெகன் மோகன் நேற்று பேருந்து யாத்திரை மேற்கொண்டார்.

இந்த பேருந்து யாத்திரையில் கொளுத்தும் வெயிலிலும் சாலையின் இருபுறமும் முதல்வர் ஜெகனுக்கு பெண்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.அடிக்கு அடியிலும் முதல்வர் ஜெகன் மீது மக்கள் அன்பு செலுத்தினர். மக்களுடன் உரையாடிய முதல்வர் ஜெகன், மக்களின் நலன் குறித்து கேட்டறிந்தார்.

ஸ்ரீகாளஹஸ்தியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகனை வரவேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தலைவர்கள், மலர் தூவி, சால்வை அவித்து மரியாதை செய்தனர்.

தொண்டர்கள் உங்கள் வெற்றிக்கு தயாராக உள்ள ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி மக்கள் நாங்கள் என்று கோஷமிட்டனர். வரும் பொதுத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் பேருந்துப் பயணம் திருப்பதி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி வழியாகச் சென்றது.

நகரின் ஆந்திர மாநில விதைகள் சுத்திகரிப்பு நிலையம் அருகில் பேருந்து பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்பி குருமூர்த்தி, எம்எல்ஏ மதுசூதன் ஆகியோர் பேருந்தின் மேல் ஏறி வணக்கம் செலுத்தினர். அதன்பின், நாயுடுபேட்டையில் நடக்கும் சித்தம் கூட்டத்திற்கு புறப்பட்டனர்.

The post ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகன் appeared first on Dinakaran.

Related Stories: