அப்போது வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: என்னை வெற்றி பெற செய்தால் தென்சென்னை தொகுதியை எப்படி மாற்றி காட்டுகிறேன், என்று மட்டும் பாருங்கள். ஒன்றிய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டிய திட்டங்களை அனைத்தையும் பெற்றுத் தருவேன். விநாயகபுரம் பகுதியை சுத்தமாக மாற்றிக் காட்டுவேன். எனது ஆசை என்னவென்றால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று இந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அவர்கள் உடன் இருந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post என்னை வெற்றி பெற செய்தால் தென்சென்னை தொகுதியை எப்படி மாற்றி காட்டுகிறேன் என்று மட்டும் பாருங்கள் : பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் appeared first on Dinakaran.