பிரசாரத்தின் போது தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பது. அதனை இன்னும் செய்யவில்லை. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் அதையும் செய்யவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். அதையும் செய்யவில்லை. வேளச்சேரி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென கூறினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் பள்ளிக்கரணை குறித்து அதிகம் தெரிந்தவராக இருக்கட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி அனுமதி வாங்கி உள்ளோம். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்ட் நிதியுதவியுடன் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வேளச்சேரி பகுதியில் சுற்றுலா தலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி appeared first on Dinakaran.