இச்சம்பவம் தொடர்பாக ஜியோ நிறுவனம் சார்பில் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செல்போன் டவர் அமைந்துள்ள இடத்திற்கு பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாததாலும், ஒப்பந்தம் காலாவதியானதாலும், அங்கிருந்த மின்சாதன பொருட்களை இடத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(31), திருத்தணியை சேர்ந்த பூபதி ஆகிய மூன்று பேர் சேர்ந்து திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முத்துக்குமார் மற்றும் பூபதி ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
The post பள்ளிப்பட்டில் மூடப்பட்டிருந்த செல்போன் டவரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் திருட்டு: இருவர் கைது appeared first on Dinakaran.