அவரை எச்சரித்த சரண்யா, வெளியே சென்று கத்திவிடுவேன், என்று வேல்முருகனை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த வேல்முருகன், அருகில் இருந்த சுத்தியலை எடுத்து சரண்யாவின் பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே வேல்முருகன் அங்கிருந்து ஒன்றும் தெரியாதப்படி தப்பி ஓடிவிட்டார். பிறகு வீட்டின் உரிமையாளர் வீட்டை சுற்றி பார்க்க வந்த போது, சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது அருகில் ரத்த கரையுடன் சுத்தி ஒன்றும் கிடந்தது.
அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பி ஓடிய கொத்தனார் வேல்முருகனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே சரண்யா நேற்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதேநேரம் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்து வந்த கொத்தனார் வேல்முருகனை தீவிர தேடலுக்கு பிறகு திருப்பூரில் அதிடியாக கைது செய்தனர்.
The post ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை: கொத்தனார் கைது appeared first on Dinakaran.