திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் உறையூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தனது கட்சி தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது காய்கறி மார்க்கெட் பகுதியில் பெண்கள் நடத்தி வரும் சாலையோர காய்கறி கடை ஒன்றில் அமர்ந்து வாழைப்பழம் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி முருகானந்தம் அறிமுக கூட்டம் ஈரோடு அந்தியூரில் நடைபெற்றது. அப்போது அந்தியூர் வனச்சரக அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவசர அவசரமாக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்ட கட்சி பணிமனை சிறிது நேரத்தில் கட்சி காரர்கள் யாரும் இன்றி வெறிசோடி வெறும் ரிப்பனுடன் பரிதாபமாக காணப்பட்டது.
அதிமுக கூட்டணி சார்பில் திருவள்ளூரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி தமிழ்நாடு- ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுண்ணாம்பு குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அருகில் நின்று இருந்த அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் காதில் சொல்வதை கேட்டு கேட்டு தேமுதிக வேட்பாளர் வாக்குறுதிகளை மைக்கில் அறிவித்தார். தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் விவசாயி செந்தில் குமார். அம்மன் பேட்டை மாணகோரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் சாலையோரத்தில் இளநீர் கடையில் இருந்த இளநீர் வெட்டி கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
The post திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகமது முபாரக் பரப்புரை பிரச்சாரம்: குழந்தைக்கு பெயர்சூட்டிய திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.