இரவு பகலாக சுற்றி திரியும் இந்த யானையால் தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று நள்ளிரவு தேவிகுளம் டவுனில் நுழைந்த படையப்பா யானை, சாலை அருகே உள்ள ஹோட்டலின் முன்பு பரிசோதனை நடத்தி விட்டு தான் சென்றது. இது அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ளது. பெரிய சேதங்கள் ஒன்றும் கூறப்படவில்லை.அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் யானையை வனப் பகுதிகளுக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் படையப்பா உள்ளது என்று கூறப்பட்டாலும், இரவு நேரங்களில் யானையைக் கண்காணிப்பது சிரமமான காரியமாக உள்ளது. எனவே இரவு நேரங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் சுதந்திரமாக உலா வரும் காட்டு யானை கண்ணில் படுவதை துவம்சம் செய்து வருகிறது.
The post மூணாறு அருகே ஓட்டலில் உணவு தேடிய படையப்பா யானை; இரவில் குடியிருப்புப் பகுதியில் சுற்றுகிறது appeared first on Dinakaran.