இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை பாஜக அரசு முடக்கி உள்ளது. இத்தகைய செயல் பொருளாதார ரீதியாக காங்கிரஸை முடக்கும் பாஜகவின் போலி முயற்சிகளே தவிர, வேறொன்றும் இல்லை. பாஜக அரசின் இதுபோன்ற தந்திரங்களுக்கு பயப்படும் கட்சி காங்கிரஸ் அல்ல. ஒரு கட்சி மேல் வரி பயங்கரவாதம், ஒரு கட்சி தேர்தல் பத்திர திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ஊழல். இது போன்ற சூழலில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?. வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் ஜனநாயகம் எதிர்பார்க்கிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் :காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நம்பிக்கை!! appeared first on Dinakaran.