அப்போது எம்பி கலாநிதி வீராசாமி, பகுதிமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசுகையில், கொளத்தூர் தொகுதியில் மக்கள் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழக முதல்வரின் தொகுதி இது. முதல்வரின் முயற்சியால் நவீன மயமாக்கப்பட்ட பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்பந்து விளையாட்டு திடல், சிறுவர் விளையாட்டு திடல் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுபோல் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பெரியார்நகர் பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்படுதல், திருவிக நகர் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணி நடந்து முடிந்துள்ளது, நடக்கவும் உள்ளது என்றார். திமுக அரசின் சாதனைகளை விளக்கியும் பேசினார்.
நிகழ்ச்சியில், கொளத்தூர் பகுதி திமுக செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜ், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் லோகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ், மற்றும் கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், திமுகவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று மாலை திருவிகநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பணிமனைகளை அமைச்சர் சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
The post கொளத்தூர் தொகுதியில் 10 இடங்களில் தேர்தல் பணிமனைகள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.