வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பார்வையாளர்கள், கட்சி நிர்வாகிகள் வருகை குறித்தும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபிறகு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது வருமான வரித்துறை மற்றும் காவல்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
The post திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.