ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை திடீர் உயர்வு

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான அம்பிளிக்கை, கேதையுறும்பு, இடையகோட்டை மற்றும் மலைப்பகுதிகளான பால்கடை, வண்டிப்பாதை, கண்ணனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் நடவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் கிலோ ரூ.30க்கு விற்பனையான மிளகாய் தற்பொழுது வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் ரூ.50க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் மிளகாய் லாரிகள் மூலம் கேரளா, தமிழ்நாட்டின் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: