வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு: நடுரோட்டில் கார்கள் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி


வேதாரண்யம்: நாகை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். இதையொட்டி வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பாஜ மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கு நாகை பாஜ வேட்பாளர் ரமேஷ் வருகை தந்தபோது தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.

அப்போது பட்டாசு தீப்பொறி பரவி சாலையோர புதர், பற்றி எரிந்தது. இதனால் பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விழாவில் பங்கேற்க, வேட்பாளருடன் 10க்கும் மேற்பட்ட கார்களில் நிர்வாகிகள் வந்தனர். இந்த கார்களை திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

The post வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு: நடுரோட்டில் கார்கள் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: