இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மற்றும் திருவூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பஞ்சு மற்றும் தேங்காய் நார் போன்ற எரியக்கூடிய தன்மை உள்ள பொருட்கள் கடையில் இருந்ததால் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது. இதனால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகிப்போனதாக உரிமையாளர் காதர் பாஷா தெரிவித்தார். இதுகுறித்து காதர்பாஷா மணவாளநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின் கசிவு காரணமாக பெட், சோபா தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து: ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.