அமைச்சர்போல் நினைத்து செயல்படும் ஜெயக்குமாருக்கு ‘மைக் மேனியா’: அமைச்சர் சேகர்பாபு தாக்கு

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீடு, வீடாகச் சென்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அராஜக போக்கை கையாளுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்:

தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்பதை உணர்ந்து அவதூறுகளை அள்ளி வீசுகிறார் ஜெயக்குமார். தினமும் மைக்கில் பேச வேண்டும் என நினைக்கும் அவருக்கு ‘மைக் மேனியா’ உள்ளது. தற்போதும், தான் அமைச்சராக இருப்பதுபோல் நினைத்து அதிகாரிகளை மிரட்டுகிறார்.இந்த சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டோம். திமுக விதிமீறல்களில் எங்கும் ஈடுபடவில்லை.

The post அமைச்சர்போல் நினைத்து செயல்படும் ஜெயக்குமாருக்கு ‘மைக் மேனியா’: அமைச்சர் சேகர்பாபு தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: