தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளனர். பாஜ தனித்து நின்று தனியாகவே ஒழிந்து விடுவர். பாஜ கூட்டணியை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள வாசன், ஜான்பாண்டியன், டி.டி.வி.தினகரன், அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டும் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது டெபாசிட்டையாவது பெற்று விட வேண்டும் என்று நினைத்து போட்டியிடுகிறார். தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ என்று போஸ்டர் ஒட்டக் கூடிய நிலை வந்துவிடும். மூட்டை முடிச்சுகளோடு ஓடிவிடுவர். அதிமுகவை பொறுத்த வரை, எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கத்தை இப்படி பாழ்படுத்திவிட்டார்களே என்ற வருத்தம் உள்ளது. தமிழகத்தில் உருவான ஒரு கட்சி தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுகிறதே என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என்று போஸ்டர் ஒட்டக்கூடிய நிலை வரும்: ஈவிகேஎஸ் டார்..டார்… appeared first on Dinakaran.