திருச்செந்தூர் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் வருகை தந்தார்.

கடற்கரைக்கு சென்று கடலில் கால் நனைத்துவிட்டு கோயிலுக்கு வந்த அவர் முதலில் சூரசம்ஹார மூர்த்தியை வழிபட்டார். தொடர்ந்து மூலவரான முருகப்பெருமான் மற்றும் சண்முகரை உச்சிகால தீபாராதனையிலும், அதன்பிறகு வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: