ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.35 லட்சம் பறிமுதல்

சூளகிரி, மார்ச் 27: சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ஜான் லூர்து சேவியர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாத்துக்கானப்பள்ளி பகுதியை சேர்ந்த பத்மநாதன் என்பவரை சோதனை செய்ததில், ஆவணங்களின்றி ₹84 ஆயிரத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பேரிகை ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூருவில் இருந்து ரகுமான் என்பவர், ஆவணங்களின்றி ₹51 ஆயிரத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரண்டு இடங்களில் பறிமுதல் செய்த ₹1.34 லட்சத்தை அதிகாரிகள், சூளகிரி தாசில்தார் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ஓசூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.35 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: