இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்றம் மேயரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேயர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்கிற நிபந்தனையை மட்டும் நாங்கள் ரத்து செய்கிறோம். ஏனெனில் இதுபோன்று நிபந்தனை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாக கருதுகிறோம்’’ என கூறி உள்ளனர்.
The post ஜாமீன் நிபந்தனையாக அரசியலில் ஈடுபடுவதை நீதிமன்றம் தடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.