அவர்கள் 4 பேரும் பாஜகவில் சேர்ந்த உடன் கங்கையில் குளித்து புனிதமானவர்கள் போன்று எல்லா வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இப்படி நிறைய உதாரணங்கள் உள்ளன. மாநிலங்களை சிதைப்பது, மாநில உரிமைகளை பறிப்பது, மாநில கட்சிகளை மிரட்டுவது, வழக்கு போடுவது, பின்னர் அவர்களை பாஜவில் சேர்த்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வது தான் பாஜவின் வேலையாக இருக்கிறது. இந்தியா முழுவதும் அமைதி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். தமிழகத்தில், மோடி என்ன சொல்லி வாக்கு கேட்பார்?. அவர் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழகத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டனர். சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கூட்டத்தில், மூத்த தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, சட்டத்துறை இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ் பங்கேற்றனர்.
The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல், கார்கே சூறாவளி சுற்றுப்பயணம்: செல்வப்பெருந்தகை தகவல் appeared first on Dinakaran.