இதற்கிடையே இன்று 2வது முறையாக மற்றொரு உத்தரவை அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்து கெஜ்ரிவால் பிறப்பித்து உள்ளார். இதுகுறித்து டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வெளியிட்ட செய்தியில், ‘டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப்படும் மொகல்லா கிளினிக்குகளை நம்பியே உள்ளனர். ஆனால், சில மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளிலும் இலவச மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என என்னிடம் கேட்டு கொண்டார். எனவே போர்க்கால அடிப்படையில் அவரது உத்தரவின் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
The post டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா கிளினிக்களில் மருந்துகள் இருப்பதை உறுதிசெய்க : ED காவலில் இருக்கும் கெஜ்ரிவால் 2-வது உத்தரவு!! appeared first on Dinakaran.