உரிய ஆவணமில்லாத ₹1.50 லட்சம் பறிமுதல்

ஓசூர், மார்ச் 26: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளி சோதனை சாவடியில், பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து, சப் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், வீடு கட்டுவதற்காக வங்கியிலில் இருந்து எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். அதற்குரிய ஆவணத்தை காண்பித்து விட்டு, பணத்தை பெற்றுச் செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உரிய ஆவணமில்லாத ₹1.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: