பேட்டராய சுவாமி கோயில் தெப்ப உற்சவம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 26: தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா வரும் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு தேவராஜன் ஏரியில் பேட்டராய சுவாமி கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராயசுவாமி உற்சவ மூர்த்திகள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஏரியில் மலர்களால் அலங்கரித்து, தெப்பத்தில் பேட்டராயசுவாமியை அமர்த்தி பூஜைகள் நடைபெற்றது. ஏரியில் மூன்று சுற்றுகள் சுற்றி தெப்பத்தை கொண்டு வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post பேட்டராய சுவாமி கோயில் தெப்ப உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: