சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏனாத்தூரில் சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ரத்த தான முகாம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். இதில், ஆயுர்வேத மருத்துவர் சாய்நாதன் தலைமை தாங்கி, ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

சென்னை விஎச்எஸ் ரத்த வங்கி, சங்கார பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றிற்கு தானமாக பெற்ற ரத்தத்தை அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவமனை மாணவர்களுக்கு, ரத்த தானம் குறித்து வழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமில், 50க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முடிவில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கதிர்வேலபாபு நன்றி கூறினார்.

The post சங்கரா பல்கலையில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: