மதிய நேரத்தில், இவரது நண்பர்கள் அனைவரும் நீர்தேக்க பகுதியில் பிரியாணி சமைத்து சாப்பிட்டு, நீர்தேக்கம் நிரம்பி வழியும் இடத்தில், தண்ணீரில் குதித்து குளித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த நீர்தேக்கத்தில் அஜித் மூழ்கி மாயமானார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தேர்வாய் கண்டிகை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மாயமான அஜித்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அதே நீர்தேக்க பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு நீர்தேக்கத்தில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.