இதையடுத்து, தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்தவும், நுழைவுத் தேர்வை ஒரு முறை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ளபடி 6 இடங்களில் நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கோரி ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. எனவே, அமராவதி சைனிக் பள்ளியை நவீன தொழில்நுட்பங்களுடன் தரம் உயர்த்துமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17க்கு தள்ளிவைத்தனர்.
The post தமிழ்நாட்டில் சைனிக் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் இறுதி அவகாசம் appeared first on Dinakaran.