தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது

 

தாராபுரம், மார்ச் 24: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் தாராபுரம் அலங்கியம் அருகே தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சசிகலா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் உரிய ஆவணமின்றி ரூ.92 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், பல்லடம் தொட்டாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் 41 என்பதும், சீட்டு விளையாட ரொக்கப் பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

The post தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: