‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வான டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்து: அரசியலில் மதத்தை போல இசையில் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது: சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். டி.எம்.கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாக கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநிகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரை தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.

பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். டி.எம்.கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரை தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். விரிந்த மானுட பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வான டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்து: அரசியலில் மதத்தை போல இசையில் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: