தொடர்ந்து தலைநகர் திம்பு நோக்கி பயணித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வழி நெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளின் கொடிகளை பிடித்தபடி ஏராளமான மக்கள் வரவேற்பளித்தனர். அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பாடலுடன் நடனமாடியும் மோடியை மக்கள் வரவேற்றனர். இந்த பயணத்தின் போது பூட்டான் மன்னர் மற்றும் அந்நாட்டு பிரதமர்ருடன் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளிடையே தூதரக மற்றும் பிராந்திய ரீதியிலான உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பேச்சு வார்த்தை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2 நாள் பயணமாக பூட்டான் சென்ற பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார் அந்நாட்டு பிரதமர்..!! appeared first on Dinakaran.