இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொன்முடி அமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடி அமைச்சராகும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் உயர் கல்வி துறையே ஒதுக்க வாய்ப்புள்ளது.
The post உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி பொன்முடி இன்று அமைச்சர் ஆகிறார்? appeared first on Dinakaran.