ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மயில் வாகனத்தில் பவனி

ஓசூர், மார்ச் 22: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலை கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சந்திர சூடேஸ்வரர் மரகதாம்பிகை, மயில்வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 25ம் தேதி நடைபெறும் தேர்த்திருவிழாவை காண அருகில் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பின்னர் ஏக தசவார ருத்ராபிஷேகம், நந்தி வாகன உற்சவம், நாக வாகன உற்சவம், ரிஷப வாகன உற்சவம், ருத்ர அபிஷேகம், புஷ்பலங்காரம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன உற்சவம் என தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

The post ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மயில் வாகனத்தில் பவனி appeared first on Dinakaran.

Related Stories: