அப்போது ஏராளமான சாக்குமூட்டைகளில் கட்டுக்கட்டாக செல்லாத ரூ.2000 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்த போது மொத்தம் ரூ. 9 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் சம்பந்தப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது. செல்லாத அந்த நோட்டுக்களை எதற்காக அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பூட்டிய வீட்டில் கட்டுக்கட்டாக சாக்குமூட்டையில் ரூபாய் நோட்டு: ரூ.9 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.