பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரி அருகே கப்பல்வாடி சீனிவாச பெருமாள், பாலமுருகன், ஓம் சக்தி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. பர்கூர் அருகே கப்பல்வாடி கிராமத்தில் சீனிவாச பெருமாள், பாலமுருகன் மற்றும் ஓம் சக்தி ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவின் முக்கிய நாளான நேற்று சீனிவாச பெருமாள், பாலமுருகன், ஓம் சக்தி மற்றும் பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், அமிர்தலிங்கேஸ்வரர், நாகர் மற்றும் நவகிரகங்களுக்கு 108 தீர்த்தம் கொண்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: