சமீப காலமாக இரட்டை இலை எங்களுக்குதான், அதிமுக ஒன்றிணையும் என்று ஓபிஎஸ் பேசி வருகிறார். இந்த சூழலில் அதிமுக பெயர், கட்சி கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்தில் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோடி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவாரு என்று பாஜ நிர்வாகி கூறியதால் எடப்பாடி ஷாக்கில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி எடப்பாடி செல்லாததால், எடப்பாடி தனித்துவிடபட்டுள்ளார். தற்போது நடக்கும் அடுத்தடுத்து திருப்பங்களால் எடப்பாடி அண்ட் கோ அதிர்ச்சியில் உள்ளது.
The post பாஜ அறிவிப்பால் எடப்பாடி ஷாக் அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவாரு: மைக்கை பிடுங்கி அசிங்கப்படுத்தி அனுப்பிய நிர்வாகி appeared first on Dinakaran.