பேய்குளத்தில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம்

சாத்தான்குளம், மார்ச் 20: சாத்தான்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் பலவேசக்கார சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஐவராஜ் மகள் சுமதி (22). பிஎஸ்சி பட்டதாரியான இவர், கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். இவரது தாயார் பத்ரகாளி, வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது சுமதியை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பத்ரகாளி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் விசாரித்து வருகிறார்.

The post பேய்குளத்தில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: