பந்தலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி

 

பந்தலூர், மார்ச் 19: பந்தலூர் அருகே தேவர்சோலை தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் புலி தாக்கி பசுமாடு பலியானதை தொடர்ந்து வனத்துறை விசாரனை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவர்சோலை தேவன் எஸ்டேட் 1வது டிவிஷனில் வசித்து வரும் கூலித்தொழிலாளி அரவிந்த்தாட்சன் என்பவரது பசு மாடு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரவில்லை. இதனால் உரிமையாளர் நேற்று அருகே உள்ள தேயிலைத்தோட்டம் பகுதியில் தேடிப் பார்த்தபோது புலி தாக்கி பசு இறந்துள்ளது தெரியவந்தது.

பசு உடலின் சில பகுதிகளை சாப்பிட்டு மீதி பகுதியை அப்படியே விட்டு சென்றுள்ளது. சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து உடல் கூறு பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் வனத்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றனர்.

The post பந்தலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: