தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு 4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்

சென்னை: தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்த்ததாக கோயம்புத்தூரை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் (53), இர்ஷாத் (32), முகமது உசேன் (38), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாட்சா உமரி (55), ஆகிய நான்கு பேரை கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்களை 10 நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து 4 பேரிடமும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்த்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

The post தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு 4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் appeared first on Dinakaran.

Related Stories: