இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற காலியாக உள்ள மனைகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்ைகயை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
The post ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு திரும்ப பெற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.