ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள நேரு பூங்காவில் 125 வயதான ராட்சத ஆமை சாணக்யா, வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த கலாபகோஸ் இன ஆமை, 1969ல் இந்த பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 10 நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதாக பூங்கா நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.