பாஜ என்றுமே கானல்நீர்தான்: கனிமொழி கலாய்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் கனிமொழி எம்பி கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு பிரதமர் என்ன செய்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும். நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும், சாமானியனுக்கும் இதுவரை என்ன செய்துள்ளார்கள். வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை. பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பாஜவிற்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறி வருகிறார். அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று கூறியுள்ளார். அதுபோன்று கனவு காண்பது பாஜவினரின் உரிமை. தமிழகத்தில் பாஜ என்றுமே கானல்நீர்தான். கனவு மட்டுமே காண முடியும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்,’என்றார்.

 

The post பாஜ என்றுமே கானல்நீர்தான்: கனிமொழி கலாய் appeared first on Dinakaran.

Related Stories: