இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவு

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்து உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த மனு மீது இன்று பிற்பகல் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது .

தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருவது கவனிக்கத்தக்கது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் தங்கள் தரப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக டெல்லி உயர்ந்நிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

The post இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: