திருச்சியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

 

திருச்சி, மார்ச் 15: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18வயது முதல் 35வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுய விபரக்குறிப்பு நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறலாம். தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post திருச்சியில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: