மோடி எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: பிரதமர் எத்தனை முறை வந்தாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தென்மாவட்ட மக்கள் மிகவும் வருத்தத்திலும், ஆபத்திலும் இருந்தபோது பிரதமர் மோடி வரவில்லை. கஷ்டப்பட்ட நேரத்தில் துயரை துடைக்காத பிரதமர் தேர்தலுக்காக தென் மாவட்டம் வருவதா? என்று அமைச்சர் கூறினார்.

The post மோடி எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: