இந்தநிலையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி ஆகியோரின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தநிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. அதன்படி அங்கு மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜ 17ல் போட்டியிடுகிறது. அதேபோல் ஐக்கிய ஜனதாளத்திற்கு 16, சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 5, உபேந்திரா குஸ்வாகா மற்றும் ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
The post தொடர் இழுபறிக்கு முற்றுப்புள்ளி: பீகாரில் நிதிஷ்குமாருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு.! 17 தொகுதிகளில் பாஜ போட்டி appeared first on Dinakaran.